இலங்கை கண் தான சங்கத்தினால் 500 இலவச வெண்புரை சத்திர சிகிச்சை!

Date:

இலவச விழி வெண்புரை (கட்ரக்) சத்திரசிகிச்சையை மேற்கொள்ள இலங்கையின் கண் தான சங்கம் முன்வந்துள்ளது.

அதற்கமைய 500 பேருக்கு குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ளவிருப்பதுடன் இதுவரையில் 280 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வறுமையின் கீழ் வாழ்கின்றவர்களுக்கு இலவசமாக வெண்புரை சத்திர சிகிச்சையை மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே இந்த சத்திர சிகிச்சையை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கொழும்பு கண் தான சங்கத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்கப்படுகின்றார்கள்.

அதற்கமைய சத்திரசிகிச்சையை பதிவுசெய்ய வருபவர்கள் கிராமசேவகர் சான்றிதழ், நீரிழிவு தொடர்பான பரிசோதனை, ECG பரிசோதனை உள்ளிட்ட பத்திரங்களை  சமர்ப்பிக்க வேண்டும்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...