தீ விபத்தில் தாய், மகன், மகள் உயிரிழப்பு!

Date:

மன்கடவல, அலயபத்துவ பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

மஹாமன்கடவல, வெவபாறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (27) காலை ஏற்பட்ட திடீர் தீயினால் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வீட்டின் உரிமையாளரான சமந்தா என்பவர் பலத்த தீக்காயங்களுடன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், இந்த வீட்டுக்கு வேறு வீட்டில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்ததும், அந்த அறையில் பெட்ரோல் போத்தல் ஒன்று இருந்ததும் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தையடுத்து அயலவர்கள் சிறிது நேரத்தில் தீயை அணைத்துள்ளனர்.

இருப்பினும் அறையில் உறங்கிக் கொண்டிருந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Popular

More like this
Related

கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து முசலியில் ஆர்ப்பாட்டம்!

முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31)...

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...

மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி,...

இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் 738 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில்,...