ஆணைக்குழுவின் கடமைகளில் அரசியல் அழுத்தம்!

Date:

சுயாதீன ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் இன்று (30) முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

நேற்று மாலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய அவர், சுயாதீன ஆணைக்குழுவின் வகிபாகம் சுயாதீனமாக செயற்படுவதே தவிர அரசியல் அதிகாரத்தின் தீர்மானங்களை அமுல்படுத்துவதல்ல. அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்சவிடம் தானே தலைமை பதவியை கேட்டதாக கூறியது தெரியாத கதை என அவர் தெரிவித்திருந்தார்.

இதுபோன்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் வழங்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாதது ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும். அதன்படி இன்று முதல் இதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...