588 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை

Date:

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 588 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நாளை விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகமும் சிறைச்சாலைகளின் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க இன்று தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றங்களால் புனர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிறைச்சாலைகளில் சிறந்த நடத்தைகளால் நிரூபிக்கப்பட்ட 31 கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று பேச்சாளர் கூறினார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...