588 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை

Date:

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 588 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் நாளை விடுவிக்கப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகமும் சிறைச்சாலைகளின் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க இன்று தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றங்களால் புனர்வாழ்வளிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சிறைச்சாலைகளில் சிறந்த நடத்தைகளால் நிரூபிக்கப்பட்ட 31 கைதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று பேச்சாளர் கூறினார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...