மீண்டும் பாராளுமன்றில் பௌசி: முஜிபுருக்கு பதிலாக எம்.பி.யாக பதவியேற்றார்!

Date:

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று(வியாழக்கிழமை) மீண்டும் நாடாளுமன்றத்திற்கு  வருகைத்தந்துள்ளார்.

அதற்கமைய அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் பெயரிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி 2020 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 48 ஆயிரத்து 701 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

பொடி லெசியை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட...

மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு...

காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்ட ‘பொடி லெஸி’

இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட ‘பொடி லெஸி’ காலி குற்றவியல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பிணையில்...