சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை குறித்த முக்கிய தகவல்!

Date:

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதியுதவி தொடர்பான தீர்மானமானது, கடன் நிவாரணம் தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கும் உடன்படிக்கைகளை பொறுத்தே அமையும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நீட்டிக்கப்பட்ட நிதி வசதி குறித்த பணியாளர் ஒப்பந்தம், கடனாளிகளிடமிருந்து தொடர்புடைய உடன்படிக்கைகள் பெறப்பட்டவுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என நிதியம் தெரிவித்துள்ளது.

 

இதன் மூலம் இலங்கைக்கு அத்தியாவசியமான நிதி வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  நிதி நெருக்கடியில் இருந்து இலங்கை மீள உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி நிவாரணம் பெறுவதற்கு தேவையான நிதி உத்தரவாதங்களை பெறுவதற்கு இலங்கை தனது இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

உரிய நோக்கத்திற்குத் தேவையான போதுமான நிதிச் சான்றிதழ்களைப் பெறுதல் உள்ளிட்ட ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தவுடன் இலங்கைக்கு அனுப்ப ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள முதல் நிவாரணப் பொதியை உடனடியாக  வழங்க இணக்கம் கிடைத்துள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...