‘திங்களன்று கொழும்பை சுற்றிவளைப்போம்’: போராட்டத்துக்கு ஆயத்தமாகும் ஐ.ம.ச

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரியத் திகதியில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் போராட்டத்தை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (20) இப்போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அத்துடன், இப்போராட்டம் நிதி அமைச்சுக்கு முன்பாகவும், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகவும் நடத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

“தேர்தலை நடத்தாமல் இந்த அரசால் முன்னோக்கிச் செல்ல முடியாது. எனவே, தேர்தல் நடத்தப்பட வேண்டும். எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பைச் சுற்றிவளைப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...