உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இதன்போது திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். உள்ளூராட்சி தேர்தலை தள்ளி வைக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.