கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்குள் போராட்டக்கார்கள் நுழைய தடை!

Date:

வரிச்சலுகைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் உள்ள முக்கிய இடங்களுக்கு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடலுக்கு செல்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

திட்டமிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டால், போராட்டக்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அமைதியின்மை ஏற்படும் என்று கூறி கோட்டை காவல்துறை இந்த உத்தரவை கோரியது.

பொதுமக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மறித்து ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் பகுதிகளுக்குள் நுழைய முடியாதவாறும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாதென்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது,...

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் இம்மாதத்தில் வழங்கப்படும்

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும்...

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (08) நண்பகல் 12:00 மணி...

நூல் அறிமுக விழாவும் இலவச கத்னா வைபவமும்

கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள Muslim Ladies Study Circle ஏற்பாடு செய்துள்ள நூல்...