இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் பலி!

Date:

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகின்றது.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது.

அந்த பகுதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துகின்றது. இதில் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகின்றது.

இந்நிலையில், மேற்கு கரை நகரமான நப்லஸ் மீது இஸ்ரேல் இராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

சுமார் 50 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு போராளி குழுவினரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் அதன் படைகள் வடக்கு, மேற்குக் கரை நகரத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியது.

பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலிய படைகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும், பதிலுக்கு பாலஸ்தீனியர்கள் டயர்களை எரித்தும், இராணுவ வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு படைகள் அந்த நகரை விட்டு சென்றதாக கூறப்படுகின்றது.

Popular

More like this
Related

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...