இலங்கைக்கு அவசரமாக நிதியுதவி தேவைப்படுகிறது: அமெரிக்கா

Date:

இந்த தருணத்தில் இலங்கைக்கு மிக அவசரமான நிதி நிவாரணம் தேவைப்படுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எல். யெலன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடன் சுமையால் உலகின் பல நாடுகள் பின்தங்குவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சுமார் 55 சதவீத நாடுகள் கடன் ஆபத்தில் உள்ளன என்று அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.

வளரும் நாடுகள் மற்றும் கடன் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு மிகவும் பயனுள்ள கடன் நிவாரணம் வழங்க சீனா உட்பட அனைத்து இருதரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எல். யெலன் கூறினார்.

மேலும்  இலங்கை மற்றும் சாம்பியாவிற்கு மிக அவசரமான கடன் நிவாரணம் தேவை.இலங்கைக்கான குறிப்பிட்ட மற்றும் நம்பகமான நிதிச் சான்றிதழ்களை வழங்குவது இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...