சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் மீடியா போரத்தினால் விசேட கருத்தரங்கு ஞாயிறன்று!

Date:

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘கிழக்கு, மற்றும்  மேற்குப் மாகாண  பெண்களின் உரிமைகளின் மதிப்புகள்’ என்ற தொனிப்பொருளில் விசேட கருத்தரங்கொன்று எதிர்வரும் 12 அன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பு 24 ஹோர்டன் பிளேஸில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் லைட்ஹவுஸ் கேட்போர் கூடத்தில் பிற்பகல் 3.30 முதல் மாலை 6.30 வரை இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், சிறப்பு பேச்சாளர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்  ஃபரீனா ருஸைக், சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தெஹ்ரான், ஈரான் பெண்கள் மற்றும் குடும்ப ஆய்வுகளில் கலாநிதி பட்டம் பெற்ற Zahirah mirjafari, கலாநிதி மரீனா தாஹா ரெஃபை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், saturday express  தலைமை ஆசிரியர், ஹனா இப்ராஹிம் அவர்கள் இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்தவுள்ளார்.

இந்நிகழ்வில் நீங்களும் பங்கேற்க விரும்பினால் முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் என்.எம். அமீன், 077 261 2288, அவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...