சாதாரண தர பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும்: கல்வி அமைச்சர்

Date:

2022 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சையை நடத்துவதில் தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

A/L பரீட்சை பெறுபேறுகளை வெளியிட எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டதோ அது O/L பரீட்சையை நடத்துவதில் தாமதத்தை ஏற்படுத்தும்.

பரீட்சை திணைக்களத்திற்கு இரண்டு பரீட்சைகளுக்கு இடையில் குறைந்தது மூன்று மாத இடைவெளி தேவை. எனவே, திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்த முடியுமா என்பதை அமைச்சு எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...