இன்றும் பல துறைகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்!

Date:

திட்டமிட்டபடி இன்று (14) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் நேற்றிரவு (13) இடம்பெற்ற கலந்துரையாடலில் முன்னேற்றம் காணப்பட்ட போதிலும், தொழில் நடவடிக்கைகளை இடைநிறுத்துவது போதாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கலந்துரையாடலில் ஜனாதிபதியின் இறுதித் தீர்மானம் எட்டப்படாததால் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஷியாம் பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்திலும் முக்கிய நகரங்களிலும் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கல்விசார் கல்விசாரா ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...