இன்று மாலை இயக்கப்படவுள்ள ரயில் சேவைகள்!

Date:

ரயில்பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (15) பிற்பகல் 9 புகையிரதங்கள் மாத்திரம் இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

இதன்படி, பிரதான மற்றும் வடக்கு வழித்தடங்களில் 4 புகையிரதங்களும், கரையோர மற்றும் புத்தளம் மார்க்கத்தில் தலா 2 புகையிரதங்களும், களனிவெளி பாதையில் ஒரு புகையிரதமும் சேவையில் ஈடுபடவுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு ரம்புக்கனை, கண்டிக்கு மாலை 5.10 மணிக்கும், கனேவத்தைக்கு மாலை 4.40 மணிக்கும், மஹவவிலிருந்து மாலை 6.00 மணிக்கும் பிரதான பாதையில் புறப்படும்.

சாகரிகா எக்ஸ்பிரஸ் ரயில் மருதானையில் இருந்து பெலியத்த வரை கரையோரப் பாதையிலும் மாலை 5.25 மணிக்கும் காலி வரையிலும், புத்தளம் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து ஹலவத்தை வரை மாலை 4.30 மற்றும் 5.30 க்கும், களனிவெளி மார்க்கத்தில் அவிசாவளைக்கு மாலை 5.00 மணிக்கும் இயக்கப்படும்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...