சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி பாராளுமன்றத்தில் தோற்கடிப்பு

Date:

இலங்கை சட்டக் கல்லூரியின் பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணை இன்றைய பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது முன்வைக்கப்படாது எனவும் அவைத்தலைவர் தெரிவித்ததையடுத்து சபையில் காரசாரமான சூழ்நிலை ஏற்பட்டது.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதற்கான பிரேரணையை பேரவையில் சமர்ப்பித்து இன்றே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க சபாநாயகர் தீர்மானத்திற்கு எதிராக 113 வாக்குகளைப் பெற்று வர்த்தமானி அறிவித்தலுக்கு ஆதரவாக சந்திம வீரக்கொடி எம்.பி மாத்திரம் வாக்களித்த நிலையில் குறித்த தீர்மானம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானித்தார்.

அதன்படி சட்டக் கல்வி தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நிராகரிக்கப்பட்டது.

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...