தேர்தல் குறித்து ஆணைக்குழுவில் இன்றும் கலந்துரையாடல்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (23) விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.

இதன்படி இன்று (23) காலை 10 மணிக்கு அனைத்து அரசியல் கட்சி செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாத விவகாரங்கள் குறித்து நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிப்பதா அல்லது புதிய தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று முடிவு எடுக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...