ரமழான் மாதம் அனைவருக்கும் சுபீட்சம் நிறைந்ததாக அமையட்டும்: சவூதித் தூதுவர்

Date:

ரமழான் மாதம் அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும் நிறைந்ததாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

ரமழான் மாதத்தை முன்னிட்டு  அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, கருணையும், நற்செயல்களும் நிறைந்த, தவறுகள் மன்னிக்கப்படும், புனிதமிகு அல் குர்ஆன் இறக்கியருளப்பட்ட மிகப்பெரும் மகிழ்ச்சிகர நிகழ்வை நினைவுபடுத்தும் அருள் மிகு புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு, அப்புனிதமிகு மாதத்தை அடைந்துகொள்ள உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

நான் இலங்கையில் அடைந்துகொண்ட முதல் புனிதமிகு ரமழான் மாதம் இதுவாகும்.
ஆகவே அனைவருக்கும் கருணையும் சுபீட்சமும் அருளும் நிறைந்ததாக அமையப் பெற பிரார்த்திக்கின்றேன்.

இப்புனிதமிகு மாதத்தினை அனைவரும் அடைந்து, நோன்பு நோற்று நற்கிரியைகளில் ஈடுபடும் பாக்கியத்தை அடையவும், அனைவரது நற் செயல்களையும் வல்ல இறைவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன்’ என்றார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...