சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையத்தை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் !!

Date:

திருகோணமலை சம்பூரில் இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் இணைந்து சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சம்பூர் அனல் நிலையம் நிர்மாணிக்கப்படவிருந்த அதே இடத்தில் 135 மெகாவோட் சூரிய சக்தி திட்டத்தை 2 கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, 42.5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 50 மெகாவோட் சூரிய மின்சக்தித் திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த கட்டத்தை 2024 முதல் 2025 வரை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக, 72 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் மேலதிகமாக 85 மெகாவோட் திறன் கொண்ட சூரிய மின் கட்டமை நிர்மாணிக்கப்படவுள்ளது.

இரண்டு கட்டங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்காக 42 மில்லியன் டொலர் செலவில் கப்பல்துறையிலிருந்து ஹபரணை வரை 220 கிலோவோட் திறன் கொண்ட 76 கிலோமீற்றர் நீளமான விநியோக கட்டமைப்பு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த திட்டத்துக்கான ஒப்பந்தம் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி கைச்சாத்தானது.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...