முன்னாள் சபாநாயகருக்கு பாராளுமன்றத்தில் நாளை அஞ்சலி!

Date:

இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேராவின் பூதவுடல் நாளை (30) காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை பாராளுமன்றத்திற்கு முன்பாக உள்ள விசேட சம்பிரதாய மண்டபத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

ஜோசப் மைக்கேல் பெரேரா இலங்கை பாராளுமன்றத்தின் 17வது சபாநாயகராவார். 2001 முதல் 2004 வரை சபாநாயகராக பணியாற்றினார்.

பல அரசாங்கங்களில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் மற்றும் தொழிலாளர் உட்பட அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகித்த பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...