சவூதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு!

Date:

இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான உலருணவுப் பொதிகள் சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

இந்த உலருணவுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானி தலைமையில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் நேற்றையதினம் (28)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம் பைசல் மற்றும் உதவிப் பணிப்பாளர் எம.எல்.எம். அன்வர் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
இதேவேளை, இந்த நன்கொடைத் திட்டமானது சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் ஊடாக தகுதியான மக்களுக்கு இந்த உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸினால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...