பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொஹில தண்டின் நுகர்வு அதிகரிப்பு!

Date:

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கையில் கொஹில தண்டின் நுகர்வு சுமார் 45 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரியவந்துள்ளது.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் ஆராய்ச்சி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது

கடந்த 2021 செப்டெம்பர் முதல் 2022 இறுதி வரை, நாட்டில் உணவுப் பணவீக்கம் சுமார் 95 சதவீதம் அதிகரித்துள்ளது.

அந்தக் காலப்பகுதியில் வீட்டு பாவனைக்காக காய்கறிகளின் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், கொஹில தண்டின் நுகர்வு 45 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் அதனுடன் ஒப்பிடுகையில், போஞ்சி நுகர்வு 30 சதவீதமும், கரட் 29 சதவீதமும், பூசணி 27 சதவீதமும், கத்தரிக்காய் 27 சதவீதமும், பச்சை காய்கறிகளின் நுகர்வு 10 சதவீதமும் குறைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...