அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளால் 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!

Date:

அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் காரணமாக 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் உழைக்கும் போதே வரி அறவீடு போன்ற பல காரணிகளினால் இவ்வாறு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளிறேி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களில் நிபுணத்துவ மருத்துவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் மந்த போசனை நிலவி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வரும் நிலையில், அனுராதபுரம் போதான வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவில் கடமையாற்றிய நான்கு மருத்துவர்களும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.

முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை நடாத்த வேண்டிய அவசியமில்லை என்ற போதிலும் தமது கோரிக்கைகளுக்கு செவி மடுக்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...