பல உணவுப் பொருட்களின் இறக்குமதித் தடையை நீக்கக் கோரிக்கை

Date:

இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பல உணவுப் பொருட்களுக்கான தடையை நீக்குமாறு வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களுக்கு அதிகம் தேவைப்படும் சிவப்பு சீனி, பச்சைப்பயறு, உழுந்து மஞ்சள், குரக்கன் போன்ற உணவுப் பொருட்களுக்கான தடையை நீக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விவசாயிகளை பலப்படுத்தும் வகையில், கடந்த பருவத்தில் இந்த உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு அந்த உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கி வரி விதிக்க வேண்டும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் அது தொடர்பான உணவுப் பொருட்களுக்கு ஏற்படும் கறுப்பு மாஃபியாவை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...