புதிய பயங்கரவாத தடைச் சட்டம்: குறிப்பாக முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டும்: சட்ட முதுமாணி வை. எல். எஸ். ஹமீத்

Date:

ஏற்கனவே அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப்பதிலாக (Prevention of Terrorism Act) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ( Anti-terrorism Act) என்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக அதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

இதனை எதிர்க்கட்சிகள், ஊடக அமைப்புகள் மற்றும் பல அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன.

இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் 1979ம் ஆண்டு கொண்டுவரப்பட்டபோது அது தமிழருக்கெதிராகவே பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் அப்போது நாட்டில் பயங்கரவாத யுத்தம் நடைபெற்றது.

அதன்பின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து முஸ்லிம்கள் வகை தொகையின்றி அச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் பெரும்பான்மையோர் பேசவில்லை.

அதன்பின் நாட்டில் ஆட்சி மாற்றம் தொடர்பான போராட்டம் ஆட்சியை மாற்றிய பின்பும் அதாவது போராட்ட இலக்கை அடைந்த பின்பும் ஒவ்வொரு கட்சியினுடைய அல்லது அமைப்புகளினுடைய அரசியல் இலக்குகளை அடைவதற்காக வெவ்வேறு கோசங்களை எழுப்பிக்கொண்டு தொடர்ந்தபோது அது இன்னுமொரு கோணத்தில் திரும்பியது.

அப்போதுதான் பெரும்பான்மையோர் விழித்துக்கொண்டார்கள். இந்நிலையில்தான் இன்றைய சட்டமூலத்திற்கெதிராக பரவலான எதிர்ப்புக் கிழம்பி இருக்கிறது.

தற்போது இனவாதம் ஓய்ந்திருந்தாலும் எதிர்காலத்தில் மீண்டும் எழாது என்று கூறமுடியாது. அவ்வாறான சூழலில் சிறுபான்மை, குறிப்பாக முஸ்லிம்கள் மீண்டும் இலக்காகலாம்.

இந்தப்பின்னணியில் சிறுபான்மைகள் பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் இச்சட்டமூலம்பற்றி ஓரளவாவது தெளிவடைய வேண்டியது அவசியமாகும்.

இச்சட்டமூலம் பற்றி இன்று மேடைகளில் பேசப்படுவது சரியா? பிழையா? உண்மையா? பொய்யா? விம்பம் செயற்கையாக பெருப்பிக்கப்படுகிறதா? அல்லது அவர்கள் கூறுவதுதான் சரியான விம்பமா? என்பது தொடர்பாக நமக்கு ஓரளவாவது புரிதல் இருக்கவேண்டும்.

குறிப்பாக நம் அரசியல் வாதிகள், அதிலும் குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சட்டமூலத்தை ஆராயவேண்டும். ஏனெனில் அவர்கள்தான் ஆதரவாகவோ, எதிராகவோ கையுயர்த்தப் போகின்றவர்கள்.

பொதுவாக நமது நாட்டில் ஒர் சம்பிரதாயம் இருக்கின்றது. ஆளும் கட்சிக்கு ஆதரவென்றால் அனைத்து சட்டமூலங்களையும் ஆதரிப்பது. எதிரணியில் இருந்தால் அனைத்தையும் எதிர்ப்பது.

17 யும் ஆதரிப்போம், 18யும் ஆதரிப்போம், 19யும் ஆதரிப்போம், 20யும் ஆதரிப்போம், 21 யும் ஆதரிப்போம். 22 வந்தாலும் ஆதரிப்போம். அதாவது + யும் ஆதரிப்போம்.

அதன் – யும் ஆதரிப்போம். அது நாம் ஆளும் கட்சியில்இருக்கின்றோமா? எதிர்க்கட்சியில் இருக்கின்றோமா? என்பதைப் பொறுத்ததேயொழிய அச்சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை பொறுத்ததல்ல.

அதன் சாதக, பாதகங்களைப் பொறுத்ததல்ல என்பது எழுதப்படாத எமது கொள்கை விதியாகும். சட்டமூலத்தையே வாசிக்காமல் அதன் உள்ளடக்கம் எப்படித்தெரியும்?

எனவே, தயவசெய்து குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சட்டமூலத்தை வாசியுங்கள். பொதுவாக, ஒரு முக்கியமான சட்டமூலம் வரும்போது அதனை வாசித்துப் புரியமுடியாவிட்டால் அத்துறையோடு சம்பந்தப்பட்டவர்களுடனாவது அது தொடர்பாக கலந்தாலோசியுங்கள். அதன்பின் கையுயர்த்துங்கள்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...