உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 50 நாட்களாக தாமதம் !

Date:

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது சுமார் 50 நாட்களாக தாமதடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் முன்வராமையே இதற்கு காரணமென திணைக்களம் கூறியுள்ளது.

பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் கலந்துகொள்வது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இதுவரை தமக்கு அறிவிக்கவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மதிப்பீட்டு பணிகளுக்காக சுமார் 5000 ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியமெனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான பின்புலத்தில் க.பொ.த உயர்தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகள் தாமதமடைந்துள்ளமையினால், சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட தினத்தில் நடத்துவதிலும் சிக்கல் நிலைமை காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...