உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25இல் நடத்த முடியாது: ஆணைக்குழு

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இம் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலோ அல்லது நிதி ஒதுக்கீடு அடிப்படையிலோ தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முடிவெடுப்பதற்காக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடியது.

உள்ளூராட்சித் தேர்தலை 25ஆம் திகதி நடத்துவது கடினமாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பை தொடர்ந்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...