காட்டு விலங்குகள் பெருக்கத்தால் பயிர் சேதம் அதிகரிப்பு!

Date:

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையில், தற்போதுள்ள வன அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் நாட்டில் வனவிலங்குகளின் எண்ணிக்கை தாங்க முடியாத வகையில் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

வன விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விலங்குகள் உரிமை அமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தின் அளவும் அதிகரித்து வருவதாக அறிக்கை கூறுகிறது.

பயிர்களை சேதப்படுத்தும் ஐந்து விலங்குகளை அறிக்கை அடையாளம் காட்டுகிறது. சேதத்தை பொறுத்தவரை, டோக் குரங்குகள், மயில்கள், ராட்சத அணில் மற்றும் காட்டுப்பன்றிகள் முதன்மையானவை.

டோக் குரங்குகள் தென்னை முக்கோணத்தில் மிகவும் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகின்றன 2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், டோக் குரங்குகள் மற்றும் ராட்சத அணில்களால் அழிக்கப்பட்ட தேங்காய்களின் எண்ணிக்கை 92 மில்லியன் ஆகும். ஆண்டின் இறுதியில், அந்தத் தொகை 200 மில்லியனைத் தாண்டியது.

உலக தொழிலாளர் அமைப்பு சமர்ப்பித்த அறிக்கையின்படி, வன விலங்குகளால் ஏற்படும் சேதத்தால் நாடு இழந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் மதிப்பு 200-250 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து அந்த விலங்குகளை நீக்க அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

எவ்வாறாயினும், விவசாயம் மற்றும் வனவிலங்கு மோதல்களை நிர்வகிப்பதற்கு பின்வரும் தீர்வுகள் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது. வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் சட்டத்தில் தேவையான திருத்தங்களை சமர்ப்பிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...