இன்று அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி கொழும்பு வரும் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Date:

புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு சென்ற பலர் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி இன்று (16) கொழும்புக்கு திரும்ப உள்ளனர்.

எனினும் இந்த ஆண்டு அதிவேக நெடுஞ்சாலைகளில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதால் 856 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் பயன்பாடு அதிகரித்து வருவதால், அந்த சாலைகளில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் மாத்திரம் இடம்பெற்ற அதிவேக விபத்துக்களின் எண்ணிக்கை 1,675 ஆகும்.

இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் படுகாயமடைந்தனர்.

நிலைமை இப்படி இருக்கும்போது, ​​இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான மூன்றரை மாதங்களில் மட்டும் நிகழ்ந்த அதிவேக விபத்துகளின் எண்ணிக்கை 856 ஆகும்.

இதில் 6 பேர் உயிரிழந்தனர், 14 பேர் படுகாயமடைந்தனர்.

வாகனத்தின் நிலை குறித்து சாரதிக்கு போதிய புரிதல் இல்லாததே நெடுஞ்சாலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணம் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...