IPL 2023 : டெல்லியை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூர்!

Date:

பெங்களூரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணி மோதின.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி அரை சதமடித்து ஆட்டமிழந்தார். மஹிபால் லாம்ரோர் 26 ஓட்டத்திலும், மேக்ஸ்வெல் 24 ஓட்டத்திலும், டுபிளிசிஸ் 22 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர். டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து, 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. தொடக்கம் முதல் டெல்லி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மணீஷ் பாண்டே மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்து ஆட்டமிழந்தார்.

அக்சர் படேல் 21 ஓட்டங்கள், டேவிட் வார்னர் 19 ஓட்டங்களும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் நோர்க்யா 23 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில், டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 151 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

பெங்களூர் அணி சார்பில் விஜயகுமார் விஷாக் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...