மஹாராஷ்டிரா மாநில அரசின் பூஷண் விருது வழங்கல் விழாவின்போது கடும் வெப்பத்தினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று நவி மும்பை நகரில் திறந்தவெளி மைதானத்தில் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் தத்தாத்ரேயே நாராயணுக்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விருது வழங்கினார். மஹாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே மற்றும் துணைத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். காலை 11.30 மணி முதல் பகல் நிகழ்ச்சி 1.00 மணி வரை இந்நிகழ்ச்சி நடந்தது.
நேற்று பகல் வெப்பநிலை அதிகபட்சமாக 38 பாகை செல்சியஸ் பதிவாகி இருந்தது. இந்நிலையில், கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்கள் பலர் கடும் வெப்பநிலை தாங்காமல் சுருண்டு விழுந்தனர்.
இதில், 13 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே தெரிவித்துள்ளார்.