மே 1ஆம் திகதிக்கு பின்னர் முட்டை விலை குறையும்!

Date:

மே முதலாம் திகதிக்கு பின்னர் தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட குறைவான விலையில் முட்டையின் விலையை குறைக்க தயாராக இருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் முதல் விலையை குறைப்பதற்கு அதிகாரிகளின் தலையீடு தேவையில்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையானது தற்போது முட்டைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதித்துள்ள போதிலும், விநியோகம் மற்றும் தேவைக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏழு முதல் எட்டு மாதங்களாக முட்டை உற்பத்தியாளர்களை குறிவைத்து வருகிறது, ஆனால் நடைமுறையில் விலையை குறைக்க தவறிவிட்டது.

பண்டிகைக் காலங்களில் தேவை அதிகமாக காணப்படுவதாகவும் அதனால் முட்டையின் விலை அதிகரிப்பது இயல்பானது எனவும் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...