மே 1ஆம் திகதிக்கு பின்னர் முட்டை விலை குறையும்!

Date:

மே முதலாம் திகதிக்கு பின்னர் தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட குறைவான விலையில் முட்டையின் விலையை குறைக்க தயாராக இருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் முதல் விலையை குறைப்பதற்கு அதிகாரிகளின் தலையீடு தேவையில்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையானது தற்போது முட்டைகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதித்துள்ள போதிலும், விநியோகம் மற்றும் தேவைக்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை ஏழு முதல் எட்டு மாதங்களாக முட்டை உற்பத்தியாளர்களை குறிவைத்து வருகிறது, ஆனால் நடைமுறையில் விலையை குறைக்க தவறிவிட்டது.

பண்டிகைக் காலங்களில் தேவை அதிகமாக காணப்படுவதாகவும் அதனால் முட்டையின் விலை அதிகரிப்பது இயல்பானது எனவும் சரத் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...