சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்காக பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
IMF விரிவாக்கப்பட்ட நிதி வசதி மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் மார்ச் 22 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடன்வசதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்வதற்கும், குறித்த கடன் வசதிக்குரிய ஏற்புடைய பிரதான கொள்கை வகுப்புக்களில் உட்சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.
அதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி செயற்பாடுகளுக்காக பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.