ஸஹ்ரானின் வண்ணாத்துவில்லு தோட்டத்தில் புதையல் தோண்ட முயற்சித்த அதிரடிப்படையினர் இருவர் கைது!

Date:

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிமுக்குச் சொந்தமான புத்தளம், வண்ணாத்தவில்லு தவில்லுவ, லாக்டோ தோட்டத்தில்  உள்ள  இடம் ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும்  பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் இருவர், இன்று (19) அதிகாலை கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப் படை தெரிவித்துள்ளது.

புதையலை  பெற்றுக்கொள்வதற்காக யாகம் செய்ததாகக் கூறப்படும் பூசகர் சோதனை நடத்தப்பட்டபோது தப்பிச் சென்றதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய நபரை கைதுசெய்ய விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிடைத்த தகவலுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குருணாகல் முகாமை சேர்ந்த அதிரடிப்படையினரால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதுளை தல்தென பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய பொலிஸ் கான்ஸ்டபிள் முனமல்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...