அக்குறணையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

Date:

கண்டி, அக்குரணையில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பிரதேசம் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அலவத்துகொட பொலிஸ் அத்தியட்சகரிடம் (OIC) ‘நியூஸ் நவ்’ தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலதிக பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க அப்பகுதியில் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பள்ளிவாசலுக்கு மட்டுமல்லாமல் முழு பிரதேசத்திற்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பள்ளிவாசல் அருகில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் பரிசோதனைக்குட்படுத்துவதாகவும் அக்குறணை பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...