உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறினார் ராகுல் காந்தி!

Date:

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று (22) தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார்.

பங்களாவை விட்டு வெளியேற காரில் ஏறும் முன், 19 ஆண்டுகளாக இந்த பங்களாவை கொடுத்த இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், உண்மையைப் பேசியதற்கு விலையாக பங்களாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.

உண்மையை பேசியதற்காக எந்த இழப்பீடும் கொடுக்க தயார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

2004-ம் ஆண்டு ராகுல் காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் கிடைத்த அதிகாரபூர்வ பங்களாவை ஏப்ரல் 22-ம் திகதி முன் காலி செய்யுமாறு லோக்சபா வீட்டு வசதி வாரியம் ராகுல் காந்தியிடம் தெரிவித்திருந்தது.

கிரிமினல் அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதாலும் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டதாக மக்களவைச் செயலகம் மார்ச் 24 அன்று அறிவித்தது.

2004-ல் ராகுல் காந்தி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்த அரசு பங்களாதான் இப்போது வரை அவரது வீடாக இருந்தது.

ஜன்பத்தில் உள்ள தனது தாய் சோனியா காந்தியின் வீட்டிற்கு தற்காலிகமாக செல்லவுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...