மூச்சிருக்கும் வரை படித்துக்கொண்டேயிருப்போம்:உலக புத்தக தினம் இன்று!

Date:

உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்கு விக்கும் நோக்கில் ஏப்ரல் 23ம் திகதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவை விட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங்.

புத்தகங்கள் காலத்தின் விதை நெல் என்றார் பாவேந்தர் பாரதி தாசன். தூக்கு மேடைக்கு ஏறும் தறுவாயிலும் புத்தகம் வாசித்தார் பகத்சிங். இப்படி புத்தகத்தை உலகெங்கும் உள்ள அறிவாளிகள் காலங்காலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

புத்தகம் தின வரலாறு

யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாள், 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களையும், ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.

உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது.

புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் மற்றொரு கவனிக்க தகுந்த விஷயமாக உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளாக அமைந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் உலக அளவில் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்களானமாரிஸ் ட்ரூன், ஹால்டோர் கே. லக்ஸ்னஸ், விளாடிமிர் நபோகோவ் மற்றும் மானுவல் மெஜியா வலேஜோ ஆகியோரின் பிறந்தநாளாக உள்ளது.

மனித சமூகத்தில் அறிவு வளர்ச்சியின் கருவியே புத்தகங்கள் என பார்க்கப்படுகிறது. பொதுவாக மனிதன் வளர்ச்சியில் பெரும்பாலான தகவல்களை மரபணுவே கடத்தி விடுகிறது.

 

 ஆனால் மனிதன் தன் வாழ்நாளில் கற்று தெரிந்து கொண்ட விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்த செய்த முயற்சி தான் ஓலைச்சுவடி, செப்பேடுகள், என படிப்படியாக வளர்ச்சி கண்டு தற்போது புத்தகங்களாக வளர்ந்து நிற்கிறது.

இப்படி ஆரம்பித்த முயற்சியால் தான் இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான புத்தகங்கள் மனிதர்களின் கைகளில் தவழ்கின்றன.

இன்றைய நாட்களில் இளம் தலைமுறை குழந்தைகளை இ-புக்குகளாக வாசிக்க பழகுகின்றனர்.

இந்நிலையில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேலும் மேலும் குழந்தைகளிடம் வளர்க்கும் நோக்கில்தான் ஆண்டு தோறும் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் 2023 உலக புத்தக தினம் “சுதேசி மொழிகள்” என்ற கருப்பொருளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தீம் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தையும் இலக்கியம் மற்றும் கதைசொல்லலில் உள்நாட்டு மொழிகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

கணிசமான அறிவு, ஞானம் மற்றும் தனித்துவமான கண்ணோட்டங்களைக் கொண்டிருப்பதால், அடிக்கடி அழிந்துபோகும் அல்லது அழிந்துபோகும் ஆபத்தில் இருக்கும் பழங்குடி மொழிகளைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.

இந்நிலையில் நாம் அனைவரும் பிறந்த நாள், திருமண நாளை கொண்டாடுவதை போல் உலக புத்தக தினத்தை கொண்டாடும் வகையில் புத்தகங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்ச்சியடையலாம்.

அந்த வகையில் இந்த ஆண்டு புத்தகங்களை பரிசளிப்பவர்களுக்கும், பெற்றுக்கொள்வர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் ஹெச்டி தமிழ் வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...