வெசாக் தன்சல்கள் வெகுவாக குறையும்: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Date:

ஏனைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வெசாக் போயாவை முன்னிட்டு நடத்தப்படும் தன்சல்களின் (தானசாலைகளின் ) எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார் .

சில சுகாதார மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு தன்சல்கள் நடத்துவது குறித்து யாரும்பதிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார் .
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் கூறியதாவது:

“இந்த ஆண்டு, வெசாக் தன்சல் பற்றி எங்களுக்கு எந்த பதிவுகளும் இடப்பெறவில்லை. பெரும்பாலான சுகாதார மற்றும் வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு இதுவரை தன்சல்கள் பற்றி தெரிவிக்கப்படவில்லை.

இதன் காரணமாக இந்த ஆண்டு தன்சல்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்சல் நடத்த விரும்பினால், வழக்கம் போல் சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவும். அதுபற்றி தகவல் தெரிவித்த பின், அங்கு சென்று, இடங்களை சரிபார்த்து, தேவையான அறிவுரைகளை வழங்குவோம். தன்சல் நடைபெறும் நாட்களில் அந்தந்த இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...