சாணக்கியனுக்கும் பிரதி சபாநாயகருக்கும் சபையில் கடும் வாக்குவாதம்!

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிற்கும், பிரதி சபாநாயகருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 09.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தெற்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபையில் கேள்விக்கான நேரம் வழங்கப்படுவதாகவும், ஆனால் வடக்கு – கிழக்கினை பிரதிநிதித்துவம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என சாணக்கியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் சாணக்கியன் கேள்வி எழுப்ப முற்பட்டுள்ளார். எனினும் இதற்கு பிரதி சபாநாயகர் அதற்கு இடமளிக்காத நிலையில் சாணக்கியன் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான பக்கசார்பாக அரசாங்கம் நடந்து கொள்வதாலேயே இன்று வடக்கு கிழக்கில் பூரண நிர்வாக முடக்கல் முன்னெடுக்கப்படுவதாகவும் சாணக்கியன் சபையில் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

எனினும் இறுதிவரை சாணக்கியன் முழுமையாக கருத்து தெரிவிப்பதற்கு இடமளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாலை 5.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...