சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

Date:

சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.

வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் கணக்கில் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.

சவூதி அரேபிய அரசாங்கம் போர்ட் சூடான் நகரில் உள்ள சிறப்பு பாதுகாப்பான ஹோட்டலில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சூடானில் தங்கியுள்ள இலங்கையர்கள் அந்த இடத்திற்கு வந்து சூடானில் இருந்து வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார்.

இதேவேளை, சூடானில் தங்கியிருந்த 13 இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற முடிந்ததாக வெளிவிவகார அமைச்சு நேற்று (26) தெரிவித்துள்ளது.

அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...