மெதகெகிய ஸ்ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் மாபெரும் கிரிக்கெட் திருவிழா!

Date:

தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் வருடாந்தம் நோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற கழக உறுப்பினர்களுக்கு இடையிலான MPL – 2023 கிரிக்கெட் தொடர் இம்முறையும் மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக பொது மைதானத்தில் கடந்த 23 மற்றும் 24ம் திகதிகளில் இடம்பெற்றது.

லீக் முறையில் இடம்பெற்ற இந்த கிரிக்கெட் தொடரில் சாம்பியனாக மனாப் அவர்களின் தலைமையிலான ரோயல் செலேன்ஜர்ஸ் அணி முடி சூடிக்கொண்டது.

இரண்டாம் இடத்தை சிபான் தலைமையிலான நைட் ரைடர்ஸ் அணி சுவீகரித்துக் கொண்டது.

இந்த தொடரில் சிறந்த துடுப்பாட்ட வீரராக ரெட் பெக்ஸ் அணியின் தலைவர் சியாம் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த பந்து வீச்சாளராக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணியின் சப்ராத் தெரிவு செய்யப்பட்டார்.

இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரோயல் செலேன்ஜர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிப்லான் தெரிவானார்.

(பவாஸ் – தகவல் அதிகாரி – அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...