அரசியல் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் தொடர்பான விபரங்கள்!

Date:

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் பேரணியாக செல்வதற்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் தயாராக உள்ளன.

இதற்கமைய பொதுஜன பெரமுன இந்த வருடத்திற்கான தொழிலாளர் தின நிகழ்வை பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் முன்னெடுக்கவுள்ளது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பிற்பகல் 02 மணியளவில் தொழிலாளர் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிலாளர் தினக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் பி ஈ குணசிங்க மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் பீ ஆர் சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொழிலாளர் தினக்கூட்டம் கண்டி பொதுச் சந்தைக்கு முன்பாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...