இந்தோனேஷியாவில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு: 11 பேர் உயிரிழப்பு: பலர் மாயம்

Date:

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

சுமத்ரா தீவின் கிழக்கு கடற்கரையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தேசிய தேடுதல் மற்றும் மீட்பு முகமை தெரிவித்துள்ளது.

குறைந்தது 78 பேரை ஏற்றிச் சென்ற விரைவுப் படகு நீரில் மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

காணாமல் போன ஒன்பது பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

படகு புறப்பட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு மரத்தில் மோதியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள்.

17,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் படகு விபத்து அடிக்கடி நடைபெறும்.

2018 ஆம் ஆண்டில், வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஆழமான ஏரியில் சுமார் 200 பேருடன் பயணித்த படகு மூழ்கியதில் 167 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...