வெசாக் தினத்தை முன்னிட்டு முஸ்லிம் விவகார திணைக்களத்தின் இன நல்லிணக்க நிகழ்வு புத்தளத்தில்..!

Date:

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமச்சின் கீழ் இயங்கும் சகல மதங்களின் திணைக்களங்களும் இணைந்து இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் பண்டிகையை முன்னிட்டு புத்தளத்தில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.

அந்தவகையில் இந்து, கிறிஸ்தவ திணைக்களத்தைப் போன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் முதற் தடவையாக, புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்வுகளில் முதல் நிகழ்வாக, நேற்று புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தில் சிரமதான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் புத்தளம் பெரிய பள்ளிவாசல், அஹதிய்யா மாணவர்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள், உலமாக்கள், நிர்வாகிகள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும், இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆப்தீன் முஹமட் பைஸல் மற்றும் உதவிப் பணிப்பாளர் அலா அஹமட் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

இதன் போது பஹன மீடியா நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ,சமன் புஷ்ப லியனகேவால் மொழி பெயர்க்கப்பட்ட “சந்த தெக்கட்ட சந்த” நூல் பௌத்த மத்திய நிலையத்தின் விகாராதிபதி உடுபாதன குசல தம்ம தேரருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...