சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷ்ய – உக்ரைன் எம்.பிக்களிடையே ஏற்பட்ட கைகலப்பு!

Date:

துருக்கி நாட்டில் இடம்பெற்ற சர்வதேச மாநாடு ஒன்றில் ரஷ்ய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (PABSEC) நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மாநாட்டில் இடம்பெற்றது.

குறித்த மாநாட்டின் ஆரம்ப நாளான நேற்றைய தினம் (04-05-2023) ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான ஒல்கா திமோபீவா நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோது, அவருக்குப் பின்னால் உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கி, உக்ரைன் தேசியக் கொடியை விரித்துப் பிடித்தார்.

இதையடுத்து ஒலெக்ஸாண்டர் மரிகோவிஸ்கியின் கையிலிருந்து உக்ரைன் கொடியை மற்றொரு ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான வெலேறி ஸ்டாவிட்ஸ்கி பறித்தார்.அதன்பின் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இதன் போது இவ்விருவரையும் அங்கிருந்தவர்கள் பிரித்தனர். மேலும் ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டாவிட்ஸ்கி, மருத்துவ சோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...