டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன: கொழும்பில் அதிகரிக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை!

Date:

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் டெங்கு நோய் பரவி வருகின்ற போதிலும், கொழும்பு நகரில் தொடர்ந்தும் டெங்கு அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், கொழும்பிற்கு வெளியில் உள்ள பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இதில் கொழும்பில் 4.8 வீதமானவர்கள் மாத்திரமே காணப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், மொரட்டுவை, இரத்மலானை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காணப்படுவதாக கொழும்பு பிரதான சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இதேவேளை டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இரசாயனங்கள் கிடைக்காததுடன் சம்பள குறைபாடு காரணமாகவே மெடங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான புகையூட்டல் நடவடிக்கைகள் மாலை 4.00 மணிக்குப் பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டிய போதிலும், மேலதிக நேரம் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமையினால் பொது சுகாதார பரிசோதகர்களின் சாரதிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் புகைமூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு மாதாந்தம் 1200 ரூபா எரிபொருள் கொடுப்பனவு மட்டுமே வழங்கப்படுகிறது.

மேலும், அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு குழுக்களை ஸ்தாபிக்குமாறு அரசாங்கம் சுற்றறிக்கைகளை வெளியிட்டிருந்த போதிலும், இதுவரையில் அவ்வாறான குழுக்கள் ஸ்தாபிக்கப்படவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போதைய மழை நிலைமை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரிப்பதுடன் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் இதுவரை, கிட்டத்தட்ட ஒரு இலட்சம் டெங்கு பதிவுகள் மற்றும் 75 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...