ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம்..!

Date:

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3.32 மணிக்கு பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனை தேசிய நிலஅதிர்வு மையமும் உறுதி செய்துள்ளது.

இதுபற்றி தேசிய நிலஅதிர்வு மையம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛மே 9ஆம் திகதி அதிகாலை 3.32 மணிக்கு பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கு 116 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 4.3 என பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் 120 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருந்தது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் சமீபகாலமாக தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...