ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள ரயில் நிலைய அதிபர்கள்!

Date:

போக்குவரத்து அமைச்சருடன் அடுத்த வாரம் நடைபெறும் கலந்துரையாடலின் போது தீர்மானம் எட்டப்படாவிட்டால் ஒரு வார கால வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அமைச்சருடனான கலந்துரையாடலின் போது திருப்திகரமான பதில் கிடைக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“எங்கள் அடையாள வேலை நிறுத்தம் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவுக்கு வந்தது. அமைச்சின் செயலாளர் தலையிட்டு தேவையான அறிவுரைகளை ரயில்வே பொது முகாமையாளருக்கு இப்போதாவது வழங்குவார் என நம்புகிறோம்,” என்றார்.

செவ்வாய்கிழமைக்கான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் ஒன்றை அமைச்சர் சங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கலந்துரையாடலின் போது தீர்வு வழங்கப்படாவிட்டால், நிலைய அதிபர்கள் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...