இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்… பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் கண்டிப்பு!

Date:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அதேநேரம்  அவரை விடுதலை செய்யவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன.

இதில் 2 வழக்குகளில் பிணையை நீட்டிக்கக் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜரான போது, இராணுவத்தினர் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், இம்ரான் கான் தரப்பில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், என்.ஏ.பி எனப்படும் தேசிய பொறுப்புடமை அமைப்பு (National Accountability Bureau )) நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டியது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் நீதிமன்றத்தை அணுகும் உரிமை உள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், முன் அனுமதியின்றி இம்ரான் கானை கைது செய்யததாக சாடியது. மேலும் நீதிமன்ற ஊழியர்களும் சட்டவிரோதமாக செயல்பட அனுமதித்ததாக உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டியது.

இம்ரான் கானை ஒரு மணிநேரத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...