இலங்கையில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 16,853 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இரண்டு இறப்புகள் அண்மையில் நிகழ்ந்த நிலையிலேயே இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
அதன்படி, மே 12ஆம் திகதி மேலும் இருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 8 பேர் நேற்று முன்தினம் பதிவாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 72 ஆயிரத்து 283 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் உட்பட பல வைரஸ்கள் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரித்துள்ளது.